Skip to content
Lyricshala
devotional lyrics

Kandar Anubhuti Lyrics in Tamil

Kandar Anubhuti
Artist page Genre hub
About this composition: read the full lyrics, browse the song meaning, and move between artist, genre, and language pages without losing the reading flow.

Full Lyrics

காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணிவே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே. (1)

உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. (2)

வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. (3)

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. (4)

மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. (5)

திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோத தயா பரனே. (6)

கெடுவாய் மனனை கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. (7)

அமரும் பதிதே ளகமா மெனுமிப் பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. (8)

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. (9)

கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. (10)

கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா தாகாசல வேலவ நாலு கவித் தியாகா கரலோக சிகா மணியே. (11)

செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. (12)

முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றென்நின் றதுவே. (13)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லு மவாவினையே. (14)

முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ எண்குண பஞ் சரனே. (15)

பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலந் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே. (16)

யாமோதிய கல்வியு மெம் மறிவுந் தாமே பெற வேலவர் தந்தனாற் பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர் தாமேல் நடவீர் நடவீ ரினியே. (17)

உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலசூர் பயங் கரனே. (18)

வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடி யென்றொரு பாவி வௌiப் படினே. (19)

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண் உரிதா வுபதேச முணர்ந் தியவா விரிதாரண விக்ரம் வேளி மையோர் புரிதா ரக நாக புரந்தரனே. (20)

கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா கரசூர விபாட ணனே. (21)

காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)

அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமமேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூத ரனே. (23)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரத்தா பூப தியே. (24)

மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றிய சேவகனே. (25)

ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோ தமனோ கீதா சுரலோக சிகா மணியே. (26)

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலேறிய வானவனே. (27)

ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரவே. (28)

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. (29)

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொவ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. (30)

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே. (31)

கலையே பதறிக் கதறிக் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையானே. (32)

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே. (33)

சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்கார லெனக்கு வரந்தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. (34)

விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே. (35)

நாதா குமரா நமவென் றரனார் ஓதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே. (36)

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியொடு மகந் தையையே. (37)

ஆதாளிaய யொன் றறியே னையறத் தீதாளியை யாண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ்வே லவனே. (38)

மாவேழ் சனனங் கெடமா யைவிடா மூவேடணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவ சங்கர தேசிகனே. (39)

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ கனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதணோடு திரிந் தவனே. (40)

சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதே சிகனே. (41)

குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே. (42)

தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யின்பின் பேசா அநுபூதி பிறந் ததுவே. (43)

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே. (44)

கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயா பரனே. (45)

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே. (46)

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே. (47)

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. (48)

தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. (49)

மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட்டவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே. (50)

உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் க்கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. (51)

Meaning & Significance

Kandar Anubhuti is a compact text, but it is not a light text. It asks questions about identity, illusion, grace, and the limits of ordinary knowing. That is why readers keep returning to it. It can be read as praise of Murugan, but it also feels like a spiritual map: the speaker is trying to move from confusion toward direct experience.

On a lyrics site, that combination matters. Many searchers want the Tamil verses exactly as they were written, but they also want to know why the hymn is still studied and chanted. The answer is that it joins devotion and inquiry without flattening either one. It is devotional, but it also has philosophical weight.

This page keeps the verses uncluttered so the reader can engage with the text first. The surrounding explanation is there to help people understand the tone and purpose of the hymn, not to replace it. That is especially important for a work like this, where the emotional force comes from the language itself.

About Arunagirinathar

Arunagirinathar is one of the major Tamil devotional poets associated with Murugan worship. His poetry is known for musical rhythm, intense devotion, and a strong sense of surrender. He writes with urgency, but he also writes with craft. That combination is part of why his work continues to be memorized and sung.

For Kandar Anubhuti, his voice matters because the poem does more than praise. It wrestles with the self, asks for release, and turns to Murugan as the answer to that struggle. Readers who come here usually want the original Tamil text and a clear explanation of why it remains spiritually important. This page is built for that use.

The site format keeps the Tamil source central and the explanation concise. That balance lets the hymn function as both devotional material and reference text without becoming over-commented or diluted.

Frequently Asked Questions

Is Kandar Anubhuti a Murugan hymn?

Yes. It is a devotional Tamil work associated with Murugan and attributed to Arunagirinathar.

Why do people read Kandar Anubhuti?

Many readers turn to it for devotion, reflection, and a direct expression of spiritual surrender.

Is the text here source-faithful?

Yes. The lyric section follows the Tamil source text directly and does not add invented lines.